குழாயிலிருந்து வீணாக வெளியேறும் குடிநீர்

சீர்காழி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்குளம் மெயின்ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
இதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திறந்து மூடும் வசதி செய்து தரப்படாததால், வெள்ளக்குளம் கிராமத்தில் 5 இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், இந்த குடிநீர் குழாய்களில் திறந்து மூடும்  வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com