சீர்காழி அருகேயுள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்குளம் மெயின்ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திறந்து மூடும் வசதி செய்து தரப்படாததால், வெள்ளக்குளம் கிராமத்தில் 5 இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களிலிருந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், இந்த குடிநீர் குழாய்களில் திறந்து மூடும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.