மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்குள்பட்ட கும்பகோணம்- சீர்காழி சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை சீர்படுத்தும் பணி, தரங்கம்பாடி- மங்கநல்லூர்- ஆடுதுறை சாலையில் ரூ 1.20 கோடியிலும், மாப்படுகை- கடலங்குடி சாலையில் ரூ 1.60 கோடியிலும், மாப்படுகை- கடலங்குடி சாலையிலும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சாலைப் பணியை விரைந்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஜெ. இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.