மயிலாடுதுறையில ராமர் படத்தை அவமதிப்பு செய்த திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 14 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் இளையராஜா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு. மகேஷ் ஆகியோர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை கச்சேரி சாலையிலிருந்து பேரணியாக கிட்டப்பா அங்காடிமுன்பு வந்தனர். பின்னர், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து, ராமர் படத்துக்கு அவமரியாதை செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ராமர் படத்தை அவமதிப்பு செய்ததாக 14 பேரை கைது செய்தனர்.