குத்தாலம் வட்டம், பொரும்பூர் பகுதியில் சாராயம் விற்றவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் போலீஸார் பொரும்பூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் எவுமகளூர் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த கீர்த்திவாசன் மகன் பாலாஜி (39), புதுவை மாநில சாராயத்தை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார், பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.