நாகை மாவட்ட மைய நூலகத்தில் இளம் படைப்பாளர் விருதுக்கான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட நூலக அலுவலர் நா. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் 58 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி நடுவர்களாக புலவர் மு. சொக்கப்பன், தமிழாசிரியர் செ. பிரபாகரன், சா. நீதிமாணிக்கம் ஆகியோர் பணியாற்றினர். நூலகர்கள் தி. மீனாகுமாரி, நா. நிர்மலா, வை. நாகராசு, மு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.