குத்தாலம் அருகேயுள்ள அனந்தநல்லூரில் காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
அனந்தநல்லூரில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தமிழ்ச்செல்வன், ராகுல், அன்பரசு, கரிகாலன், ஷாஜித்பாஷா, கண்ணன், கார்த்திக்ராஜா ஆகியோர் பங்கேற்று காளான் வளர்ப்பு பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கி கூறி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களின் பல்வேறு அரங்கை பார்வையிட்டு, வேளாண்மை ஆராய்ச்சி மாணவர்களை பாராட்டினார்.