மாவட்ட அளவிலான கவிதை போட்டியில், பொறையாறு சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி, 2-ஆம் பரிசு பெற்றார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நாகப்பட்டினம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. கவிதை போட்டியில், பொறையாறு சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஹீலிஸ் இன்ஃபான்டினா 2-ஆம் பரிசு பெற்றார். அவருக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவி ஹீலிஸ் இன்ஃபான்டினாவை பள்ளி நிர்வாகி பாண்டியராஜன், முதல்வர் மற்றும் தமிழாசிரியர் ஜாஸ்மின் ஆகியோர் பாராட்டினர்.