கன்னியாகுமரி
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
மார்த்தாண்டத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மார்த்தாண்டத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். சிற்றாறு பட்டணம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆஸ்கர் பிரடி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் எபனேசர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், மாவட்ட காங்கிரஸ் செயலர் ஜோசப் தயாசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.