குமரியில் சாரல் மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை அணைப்பகுதிகள் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அதிக பட்சமாக பாலோரில் 17.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதற்கு அடுத்ததாக சுருளகோட்டில் 16 மி.மீட்டரும், பேச்சிப்பாறையில் 13.2 மி.மீட்டரும், பெருஞ்சாணியில் 12.2 மி.மீட்டரும் பதிவாகியிருந்தது.
சாரல் மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் பாசன வசதியில்லாத கரைப்பகுதிகளில் காய்ந்த நிலையில் கிடந்த வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்டப் பயிர்களுக்கு ஓரளவு தண்ணீர் கிடைத்துள்ளது. பெருஞ்சாணி அணையிலிருந்து மட்டும் பாசனத்திற்கு விநாடிக்கு 227 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com