பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் சனிக்கிழமை 3 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ், தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ எஸ்.நூர்முகமது தொடக்கவுரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைச் செயலர் இந்திரா, ஒப்பந்த தொழிலாளர் சங்க அகில இந்திய துணைச் செயலர் பழனிச்சாமி, ஏ.செல்வம், ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.