"பேரிடர் காலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்'

பேரிடர் காலங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்கள் மூலமாக மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்கள் மூலமாக மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒக்கிபுயலின்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் சேவாபாரதி அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து முகாம்கள் அமைத்து தங்க வைத்தனர். இந்த அமைப்புகள் மூலமாக மலை கிராமத்தில் வீடு சேதம் அடைந்த 200 பேருக்கு சிமென்ட் ஷீட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 
புயலால் பாதிக்கப்பட்ட காணி மக்களில் வீடுகளை சீரமைக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
அரசியல் கட்சிகள் பேரிடர் காலங்களில் அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு,  அரசை எதிர்பார்க்காமல்,   தங்கள் தொண்டர்கள் மூலமாக மக்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com