காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து முறையாக கணக்கிட்டு அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒக்கி புயாலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வந்தபோது, அவர் அளித்த மனு:
ஒக்கி புயாலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை முறையாக கணக்கிட்டு அரசு அறிவிக்க வேண்டும். 12 நாள்களாக இருளில் தத்தளிக்கும் கிராமங்களுக்கு மின்விநியோகம் உடனடியாக சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதி செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட 27 கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.