கொல்லங்கோடு அருகே காங்கிரஸ் சார்பில் மீனவர்களுக்கு நல உதவி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, முன்சிறை வட்டார காங்கிரஸ் கமிட்டி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, முன்சிறை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொல்லங்கோடு அருகேயுள்ள சூழால் ஊராட்சி, பாலவிளை பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் முன்சிறை வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் லலிதா முன்னிலை வகித்தார். கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் கேக் வெட்டி, முதியோர் அனைவருக்கும் காலை உணவுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஏழுதேசம் பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விமல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் என்.ஏ. குமார், மாவட்டச் செயலர்கள் கோபன், டென்னிஸ், சூழால் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் டி. லாரன்ஸ், மாவட்ட பொதுச்செயலர் லூயிஸ், கொல்லங்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் அருளானந்தன் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகி நாணன், அருள்சகோதரிகள் சோபியா, அனிதா, மினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, இரவிபுத்தன்துறையில் கடந்த மாதம் ஏற்பட்ட கடல் அரிப்பால், வீடுகளை இழந்து, கலிங்கராஜபுரம் பரகுடி அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கனிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com