குளச்சல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
உடையார்விளை அஞ்சாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்டேவிட் (42). கட்டடத் தொழிலாளி. இவர் திங்கள்கிழமை காலையில் அப்பகுதியில் தலைநசுங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து குளச்சல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.