களியக்காவிளையில் பாஜக பொதுக்கூட்டம்

பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.

பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு களியக்காவிளை மண்டலத் தலைவர் எஸ்.ஆர். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஏ.சி.திலீப்குமார், பொருளாளர் மோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத் துணைத் தலைவர் என்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜு, கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ், கேரள மாநில செயற்குழு உறுப்பினர் எருத்தாவூர் சந்திரன், கட்சியின் மாநில பிரசாரப் பிரிவு செயலர் எஸ்.எஸ். மணி, துணைத் தலைவர் ஏ.ரேணுகாதேவி ஆகியோர் பேசினர்.
படந்தாலுமூடு மாட்டுச் சந்தை, அந்திச் சந்தை ஆகியவற்றுக்கான குத்தகை ஏலத்தை இம்மாதம் நடத்த வேண்டும். குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன்பெறும் விவசாயிகளுக்கு உரம் வழங்காமல் இருக்கும் நிர்வாகம் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பாஜக மாவட்டச் செயலர் கே.எஸ். முருகன், மேல்புறம் கிராம மண்டல பொதுச் செயலர் சி.எஸ்.சேகர், தலைவர் சதீஷ்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவதாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் அருண்குமார், குழித்துறை நகரத் தலைவர் எஸ்.ஆர். பக்தசிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் திக்குறிச்சி என்.சுகுமாரன், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் விஜயபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com