கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 13 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சாலைப் பணிகளை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு; 2016-17 ஆம் நிதியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாநில மற்றும் மாவட்ட சாலைகளை சீரமைக்க மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சரின் மத்திய சாலை நிதியிலிருந்து 48 சாலைகளை சீரமைக்க ரூ. 58 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.13 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் நிதிக்கான 18 சாலைகள் சனிக்கிழமை(மே20) தொடங்கிவைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.