களியக்காவிளை அருகே ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு, வலியமனைவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகன் மனோஜ் (28). களியக்காவிளையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் சனிக்கிழமை அதிகாலையில் களியக்காவிளையிலிருந்து கேரள மாநிலப் பகுதியான பாறசாலை பகுதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இஞ்சிவிளை பகுதியில், களியக்காவிளையிலிருந்து பாறசாலை நோக்கி பழங்கள் ஏற்றிச் சென்ற மினிலாரி ஆட்டோ மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மனோஜை அப்பகுதியினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து பாறசாலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.