குமரி மாவட்டத்தின் 4 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை(அக்.13)நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில், அஞ்சுகிராமம் வருவாய் கிராமத்திற்கு வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் குமாரபுரம் வருவாய் கிராமத்திற்கு குமாரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டத்தில் பேச்சிப்பாறை வருவாய் கிராமத்திற்கு பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் கீழ் மிடாலம் ஏ வருவாய் கிராமத்திற்கு ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் அக். 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் அப்பகுதி மக்கள் பங்கேற்று அடிப்படை வசதி மற்றும் பொதுவான மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.