தோவாளையில் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை திடீரென பிரதசான சாலையில் பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தோர் அனைவரும் சேர்ந்து பழுதாகி நின்ற பேருந்தை தள்ளி விட்டு, பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.