கொல்லங்கோடு அருகே சாலையோர புதரில் கிடந்த அம்மன் சிலையை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.
கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை - மேடவிளாகம் சாலையோர புதரில் அம்மன் சிலை கிடப்பதாக கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் பிரேமா மற்றும் போலீஸார் அங்கு சென்று சிலையை கைப்பற்றினர்.
தொடர்ந்து அந்த சிலையை மாவட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கொல்லங்கோடு போலீஸார் ஒப்படைத்தனர்.
இச்சிலை ஐம்பொன்னால் ஆனதா அல்லது வீட்டில் வழிபாட்டுக்கு பயன்படுத்தியதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.