மார்த்தாண்டம் அருகே தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பாவநாசம் (58). மர தச்சுத் தொழிலாளியான இவர் அண்மைக்காலமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். இந்த நிலையில் அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டிய நிலையில் காணப்பட்டது. சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து காணப்பட்டார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.