நாகர்கோவிலில் நாளை மறுநாள் கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம்: பழ.நெடுமாறன் பங்கேற்பு

கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம் நாகர்கோவிலில் புதன்கிழமை (ஏப். 18) நடைபெறுகிறது. இதில் பழ. நெடுமாறன் கலந்துகொள்கிறார்.

கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டம் நாகர்கோவிலில் புதன்கிழமை (ஏப். 18) நடைபெறுகிறது. இதில் பழ. நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
இதுகுறித்து இந்த இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: 
குமரி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவை நனவாக்கி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மாவட்ட மக்களுக்கு உள்ளது. இம்மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பாதையை கொண்டு வர அனைவரையும் ஒன்றுபடுத்தும் வகையில்,  புதன்கிழமை (ஏப். 18) கோட்டாறு ராஜகோகிலா அரங்கத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.முகமது இஸ்மாயில் தலைமையில்,  முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com