நாகர்கோவிலில் ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது.
நாகர்கோவில் அனந்தசமுத்திர கிராம பிராமண சமுதாயம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பி.தர்மராஜன் தலைமை வகித்தார். ராம்ஜி வரவேற்றார்.
இதில், இந்து வித்யாலயா மழலையர் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ராமாயண காவிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் கேசவன், சியாமளா, ஹரிஹரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.