கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 284 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, தனித் துணை ஆட்சியர் மு. சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு உயர்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.