ஆளூர் மின்பாதையில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற இருப்பதால், காரவிளை, அப்பட்டுவிளை பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 18) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தக்கலை உதவி செயற்பொறியாளர் சங்கர நாராயணபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆளூர் 11 கே.வி. மின் பாதையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுதல், பழைய மின்கம்பிகளை அகற்றி புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, புலியூர்குறிச்சி, காரவிளை, வெள்ளச்சிவிளை, அப்பட்டுவிளை, மணக்கரை, சித்தன்தோப்பு, மேல்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.