பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, வேதபாராயணம், நாம சங்கீர்த்தனமும், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு புண்யாகவாசனம், சிறப்பு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சயன சேவை, சிறப்பு ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனமும் நடைபெற்றது. சனிக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், பவித்ரோத்சவ ஹோமம், பூர்ணாஹுதி, அதைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி வீதி உலா, தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பவித்ரமாலை பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரவிபட்டாச்சாரியார் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.