சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரதமாதா சிலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாநில பாஜக துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை வகித்தார். இதில், மாவட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்.பி.தேவ், முத்துராமன், வளையாபதி சுயம்பு, நாகர்கோவில் நகரத் தலைவர் நாகராஜன், மண்டல் நிர்வாகிகள் என்.சுடலைமணி, கோபி, ரெத்தினசாமி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மாலை அணிவித்தனர். மேலும், காந்தி மண்டபத்துக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பாரதமாதாவுக்கு மரியாதை செலுத்தினர்.