கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், "கருணநிதி ஒடுக்கப்பட்டோரின் உதய சூரியன், தமிழ்கொடியின் அடையாளம்' என்ற தலைப்பில் அழகியமண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
பேரவை மாவட்ட அமைப்பாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். அப்துல்ரகுமான் வரவேற்றார். எழுத்தாளர்கள் பொன்னீலன், இமையம், மீரான்மைதீன், நட.சிவகுமார், பீர்முகம்மது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலர் ஜோசப்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ரெஜினால்டு, மாவட்ட துணைச் செயலர் ஜான்கிறிஸ்டோபர், ஒன்றியச் செயலர் சிற்றார் ரவிச்சந்திரன், குழித்துறை நகரச் செயலர் ஆசைதம்பி, அவைத் தலைவர் பப்புசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரைட்சிங் நன்றி கூறினார்.