அஞ்சுகிராமம் அருகே வீடுகட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுண் லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (32). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 19ஆம் தேதி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏணியில் ஏறியபோது தவறி விழுந்தார். இதில் கழுத்து முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இறந்த ரவிகுமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.