குழித்துறையில் சிறுமியை கடத்தியதாக பெண் கைது

குழித்துறையில் சிறுமியை கடத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.

குழித்துறையில் சிறுமியை கடத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை வள்ளியாற்று முகம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு(2017) திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதில் சிறுமியை லைசாட்(32) என்ற பெண் கடத்திச் சென்றதும், அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் நெல்லூருக்கு சென்று லைசாட்டை கைது செய்து, சிறுமியை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com