கன்னியாகுமரி சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு எதிராக கோவளத்தில் 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பிரபா, முருகேசன், ஸ்ரீதரன், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சம்சுதீந், வெனிஸ் மற்றும் கோவளம் ஊர் நிர்வாகிகள் பயஸ், பிளாசியூஸ், ததேயுஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.