அகஸ்தீசுவரம் மற்றும் கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகம், மருந்தகம், உள் நோயாளிகளின் பிரிவு, பிரசவ அறை, பிரசவ பின் கவனிப்பு அறை, ரத்த பரிசோதனைக் கூடம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை கூடங்கள், சித்தா பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்கள் மருத்துவப்பகுதி, ஆண்கள் மருத்துவப்பகுதி மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்குச் சென்ற ஆட்சியர், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிட்டு, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, உரிய சிகிச்சைகளை வழங்கிட, மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரர் பணிகள்) மதுசூதனன், சரஸ்வதி, மஞ்சு உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.