குலசேகரம் அருகே பைக் மோதி மூதாட்டி ஓமனா (61)சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருநந்திக்கரையைச் சேர்ந்தவர் ஓமனா. இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். சனிக்கிழமை காலையில் வேலைக்குச் செல்ல திருநந்திக்கரை பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பேச்சிப்பாறையிலிருந்து குலசேகரம் நோக்கி குலசேகரம் பனவிளையைச் சேர்ந்த பிரவிண் (21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஓமனா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஓமனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.