குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு புயல் காரணமாக பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை அறிவிப்புகள் வெளியாகின. பின்னர் புயல் சின்னம் அகன்றது. அதே வேளையில் கடந்த 3 நாள்களாக மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வறண்டு கிடந்த நிலங்களில் ஈரம் பிடித்துள்ளது. மேலும் வாழை, மரவள்ளி மற்றும் தென்னைகளுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 27.4 மீ.மீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக கோழிப்போர் விளையில் 18.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நாகர்கோவிலில் 10. மீ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் மலையோரப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.