கருங்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம்கருங்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்

தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருங்கல்லில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான தக்குதல் நடத்திய காவல் துறைக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படுகொலையை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வதை கண்டித்தும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருங்கல் பேருந்து நிலையம் எதிர்புறம் வியாழக்கிழமை ( மே 24) காலை 9.30 மணிக்கு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com