தமிழக காங்கிரஸ் பார்வையாளர் சஞ்சய்தத் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நாகர்கோவில் வருகிறார்.
இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பார்வையாளருமான சஞ்சய்தத் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க அக். 14 ஆம் தேதி நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். அவருக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியினர்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.