நாகர்கோவிலில்  அனைத்துக் கட்சிக் கூட்டம்

குமரி மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில்

குமரி மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.  இதில்,  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் திமுக தோழமை  கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்,  இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட  தோழமைக் கட்சிகள்   இணைந்து தேர்தலை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில்,  எம்எல்ஏக்கள் மனோதங்கராஜ்,  எஸ்.ஆஸ்டின்,   முன்னாள் எம்எல் ஏ இரா.பெர்ணார்டு,   திமுக நகரச் செயலாளர் மகேஷ்,  காங்கிரஸ் கட்சி கிழக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், மேற்கு மாவட்டத் தலைவர் ராஜேஸ்குமார் எம்எல்ஏ, பிரின்ஸ் எம்எல்ஏ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  முன்னாள் எம்.பி. பெல்லார்மின்,  ஆர்.செல்லசாமி,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து,  மதிமுக சார்பில் எஸ்.கோபால்,  ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com