கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி சாம்பியன்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில், இம்மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 64 அணிகள் பங்கேற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் பரிமார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.
இந்த அணி, டோல்பின் கால்பந்துக் கழக அணியைக் காலிறுதியில் 1-0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதிப் போட்டியில் ரயில்வே கால்பந்துக் கழக அணியை டைபிரேக்கர் முறையில் 4-3 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் மொடக்குறிச்சி கால்பந்துக் கழக அணியுடன் மோதி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிவுற, சமனுடைப்பு முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com