மாநில வில் வித்தை கோவில்பட்டி மாணவர்கள் சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்திய ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மற்றும் கலாசார சம்மேளனத்தின் தமிழக வில்வித்தைப் பிரிவு சார்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி இம்மாதம் 16ஆம் தேதி மதுரை ஆரோ ஸ்போர்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.
இப் போட்டியில்,கோவில்பட்டி சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் சார்பில் 10 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்,8 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் பிரவீண் மாநிலத்தில் முதலிடம், ரிதீஷ் 2ஆம் இடம், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் நவீன் மாநிலத்தில் முதலிடம்,ரோஹித் 3ஆம் இடம்,17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் குருபிரமோத் மாநிலத்தில் முதலிடம், கெளசிக் வாசன் மற்றும் வகீஷன் ஆகியோர் 2ஆம் இடமும் பெற்றனர்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா சனிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் நிறுவனர் கிருஷ்ணரூபா, வில்வித்தை பயிற்சியாளர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com