சாத்தான்குளம் அருகே இருவருக்கு வெட்டு: 3 பேர் கைது

சாத்தான்குளம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் செ.பால் (41). இவர் வளர்த்து வரும் ஆடுகள்,கோமானேரியில் உள்ள சாத்தான்குளம் இ.வீரபுத்திரன் (32) என்பவரது வயலில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வெள்ளரியைச் சேதப்படுத்தியதாம். இது தொடர்பாக பாலுக்கும், வீரபுத்திரனுக்கும் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது வீரபுத்திரன், அவரது வயலில் வேலை செய்து வரும் சாத்தான்குளம் தி.விசு (21), வேலன்புதுக்குளம் ப.ஆறுமுகம் (38) ஆகியோர் சேர்ந்து பாலை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதேபோல் பால்,வீரபுத்திரனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீரபுத்திரன் சாத்தான்குளம்அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் பால், வீரபுத்திரன் உள்ளிட்ட 4பேர் மீது வழக்குப் பதிந்து வீரபுத்திரன்,விசு,ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com