மது விற்பனை: முதியவர் கைது

கோவில்பட்டி அருகே மதுவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே மதுவை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமையொருபாகம் தலைமையிலான போலீஸார் இளையரசனேந்தல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த முதியவரை பிடித்து விசாரித்தபோது, அவர், அய்யனேரி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துஇருளாண்டி(72) என்பதும், அவர் மதுப்பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 15 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com