தூத்துக்குடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனிநபர் கடன் வழங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டல அலுவலகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கிளைகளின் வாடிக்கையாளர்களுக்கு தனி நபர் கடன் வழங்கும் முகாம் சிதம்பரநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில், வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு 15-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், வாகனக் கடன், தனி நபர் கடன், ஓய்வுஊதியர் கடன் என ரூ. 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மண்டல அலுவலகத்தின் முதன்மை மேலாளர் கணேசன், சீனிவாசன் மற்றும் சிதம்பரநகர், கோரம்பள்ளம், தூத்துக்குடி, முத்துநகர், துறைமுகம் உள்ளிட்ட கிளை அலுவலகங்களின் மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.