மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலய பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.
தி இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெட்டல்ஸ் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்கள் அறிந்து வைத்துள்ள உலோகங்களின் தன்மைகள் குறித்த மாநில அளவிலான போட்டி திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 62 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். கட்டுரைப் போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலய பள்ளி மாணவர் நா. ஆதிசங்கர் முதல் பரிசை பெற்றார். அவரை பள்ளிச் செயலர் பழனிசாமி, முதல்வர் கனகராதா, துணை முதல்வர் ஜெயலட்சுமி அண்ணாமலை, தலைமையாசிரியை விமலா ஆகியோர் பாராட்டினர்.