உடன்குடி-திசையன்விளை சாலையில் பழுதடைந்துள்ள மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
உடன்குடி திசையன்விளை சாலையில் தாங்கைபண்டாரபுரம் அருகே அமைந்துள்ள மின்மாற்றி அண்மையில் பழுதடைந்தது. இந்த மின்மாற்றி செயலிழந்து ஐந்து நாள்களுக்கு மேலாகியும் மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, மின் மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி உடன்குடி ஒன்றியச் செயலர் சித்திரைபெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.