கோவில்பட்டியில் நடைபெற்ற வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டியில் புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான இப்போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில், கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாண்டி முனியசாமி, வெற்றிவேல் ஆகிய இருவரும் பஐட-ஞஊஊ தஉஅயஉகஉத என்ற தலைப்பில் இடம்பெறச் செய்த படைப்பு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆசிரியைகள் முருகேஸ்வரி, கீதாராணி ஆகியோரையும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பாராட்டினர்.