மழை வேண்டி , கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி ஸ்ரீ அய்யப்பன் ஆன்மிக அறக்கட்டளை மற்றும் ஹரிஹரன் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை பாத யாத்திரைக் குழு சார்பில், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை வேண்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலம் கோயிலின் 4 ரத வீதிகளிலும் சுற்றிவந்து, கோயிலில் நிறைவடைந்தது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், ஆன்மிக பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.