கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் சத்குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 39ஆவது ஆண்டு ஆராதனை விழா இரு நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாகவத சிரோன்மணி, பாகவத ரத்னா, பாகவத சாம்ராட் பூஜ்யஸ்ரீ நாகராஜ பாகவதர் குடும்பத்தாரின் நாம சங்கீர்த்தனம் பஜனை நடைபெற்றது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விஷேச பூஜையும், 9 மணி முதல் ஸ்ரீ ரங்கம் ப்ரம்ம ஸ்ரீ இராமசந்திர பாகவதர் மற்றும் கோவில்பட்டி பஜனாம்ரத மண்டலியினரின் தலைமையில் சிறப்பு பஜனை, அபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், பின்னர் 1008 வடை மாலை சாத்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்ரீ கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ சத்குரு ராகவேந்திரா ஸ்வாமி ஆராதனை கமிட்டியினர் செய்திருந்தனர்.