உலக புகைப்பட தினம்: கோவில்பட்டியில் பேரணி

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
புகைப்பட கலைஞர் பிச்சையா தலைமை வகித்தார். ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். பயணியர் விடுதி முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, பிரதான சாலை, புதுரோடு வழியாக காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது.
பேரணியில், சங்கத் தலைவர் முத்துராமன், துணைத் தலைவர் ராகவன், செயலர் கமல்ராஜன், பொருளாளர் அருணாசலம் மற்றும் புகைப்பட கலைஞர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். சங்கம் சார்பில் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com