கோவில்பட்டி அருகே ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததையடுத்து, நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த இடைசெவல் காலனித் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் குருநாதன்(43). திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு மயங்கி கீழே விழுந்து இறந்தாராம். தகவலறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.