வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய டிச. 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், 1.1.2018-ஐ
தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2018-இன் ஒரு பகுதியான சிறப்பு இயக்கமானது, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நவ. 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது, டிசம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் டிச. 15 ஆம் தேதி வரை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.